ஆரோக்கியம்

சிறுவயதினர்கூட மன அழுத்தத்தில் தவிக்கும் சூழல்.. மனதை ஒழுங்குபடுத்தும் எளிய பயிற்சிகள் எவை?

Admin பிப்ரவரி 17, 2026 0

அமைதியான மனநிலையுடன் இருந்தால்தான் மனிதன் தெளிவாக சிந்தித்து செயல்பட முடியும். மனம் குழப்பமாகவும், கொந்தளிப்புடனும் இருக்கும் போது வாழ்க்கையின் எந்தப் பாதையையும் சரியாக முன்னெடுக்க முடியாது. இன்றைய சூழலில், அமைதியான மனதைப் பாதுகாப்பது ஒரு சவாலாக மாறியுள்ளது.

“நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கேன்”, “மன உளைச்சலா இருக்கு” போன்ற வார்த்தைகளை அதன் முழுப் பொருள் புரியாமலேயே சிறுவயதினர்கூட பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அற்பமான விஷயங்களுக்கே வயது வித்தியாசமின்றி பலரும் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கின்றனர். உறவினர் மரணம், பெற்றோர் பிரிவு, நெருங்கியவர்களின் இழப்பு போன்ற சூழல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அமைதியை குலைக்கும் காரணங்களாக அமைகின்றன.

இந்தக் கொந்தளிக்கும் மனநிலையை ஒழுங்குபடுத்த சில எளிய பயிற்சிகளை மனநல வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதில் முக்கியமான ஒன்று “5–4–3–2–1” என்ற பயிற்சி. இது நமது ஐம்புலன்களையும் நிகழ்நேரத்தில் கவனம் செலுத்தச் செய்து மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. பார்க்கும் ஐந்து விஷயங்கள், தொடும் நான்கு பொருட்கள், கேட்கும் மூன்று ஒலிகள், மணக்கும் இரண்டு வாசனைகள், சுவைக்கும் ஒரு சுவை என கவனம் செலுத்துவது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சுவாசப் பயிற்சி, தியானம் அல்லது யோகா போன்றவை பயனளிக்கும். இவை சாத்தியமில்லையெனில், தினமும் வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொள்வதும் மன அமைதிக்கு உதவும்.

உங்களுக்கு பிடித்தமான பாடலை மெதுவாக முணுமுணுப்பது, இயற்கையோடு நேரம் செலவிடுவது, கற்பனை வளத்தை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுவது ஆகியவையும் மனதை சாந்தப்படுத்தும் வழிகளாகும். அதேபோல், தொடர்ச்சியான மற்றும் தரமான தூக்கம் மிகவும் அவசியம்.

கைபேசி, தொலைக்காட்சி போன்ற திரை சாதனங்களுடன் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கஃபைன், நிகோட்டின் போன்ற பொருட்களை தவிர்ப்பதும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

இத்தகைய எளிய ஆலோசனைகளைக்கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு மன அழுத்தம் தீவிரமாக இருந்தால், தயங்காமல் மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகுவது அவசியம். சரியான நேரத்தில் கிடைக்கும் தொழில்முறை உதவி, மனநிலையை மீட்டெடுக்க முக்கிய பங்காற்றும்.

Popular post
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்   தமிழக அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி கோரியிருந்த ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது.   தமிழக வெற்றிக் கழகம் தற்போது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாகும். இருப்பினும், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுச் சின்னம் வழங்கியுள்ளது.   தேர்தல் ஆணையத்திடம் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 10 விருப்பச் சின்னங்களில் ‘விசில்’ முதலிடத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சித் தலைவர் விஜய் விரும்பிய சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.   ஒரு புதிய அரசியல் கட்சிக்கு மாநில அளவில் ஒரே சின்னம் வழங்கப்படுவது, அந்தக் கட்சியின் அடையாளத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு செல்ல உதவும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ‘விசில்’ சின்னம் எச்சரிக்கை, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்தைக் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான குரல் அல்லது புதிய அரசியல் தொடக்கத்தின் குறியீடாக இதனை த.வெ.க. பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.   இதுகுறித்து கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், “எங்கள் தலைவர் விரும்பிய விசில் சின்னமே கிடைத்துள்ளது. இது கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.   இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், அவர்கள் பயன்படுத்தி வந்த ‘டார்ச் லைட்’ சின்னம் பொதுச் சின்னமாக மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரமும் சின்னங்களும் இப்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளன.

AI போட்டியில் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’

2026-ல் முழுமையாக அப்டேட் ஆகும் ஐபோன்கள்… விபரம் என்ன? செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய அளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அந்த போட்டியை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனம் ஒரு பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு AI அடிப்படையிலான மிக முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமையக்கூடும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐ போட்டியில் ஏன் பின்னடைவை சந்தித்த ஆப்பிள்? ஓபன் ஏஐ, கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலேயே ஏஐ துறையில் தீவிரமாக கால்பதித்துவிட்டன. ChatGPT Google Gemini Microsoft Copilot போன்ற ஏஐ சேவைகள் மிக வேகமாக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னணியாக, ஆப்பிள் 2024-ஆம் ஆண்டில்தான் ‘Apple Intelligence’ என்ற தனது ஏஐ தளத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதனால், போட்டியாளர்களை விட ஆப்பிள் சற்றே தாமதமாக ஏஐ பயணத்தை தொடங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன. Apple Intelligence: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? Apple Intelligence மூலம், Writing Tools Clean Up (புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்கும் வசதி) On-device AI processing போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், கூகுள் ஜெமினி ChatGPT Copilot போன்ற ஏஐ மாடல்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் ஏஐ அம்சங்கள் அதே அளவிலான திறனை வழங்கவில்லை என பல தொழில்நுட்ப விமர்சகர்கள் கூறினர். புதுப்பிக்கப்பட்ட Siri – இன்னும் முழுமை பெறவில்லை Apple Intelligence-இன் முக்கிய அங்கமாக கருதப்பட்ட புதுப்பிக்கப்பட்ட Siri, இன்னும் முழுமையான ஏஐ அசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்கவில்லை என்பதே ஆப்பிள் எதிர்கொள்ளும் பெரிய சவாலாக உள்ளது. இயற்கையான உரையாடல் திறன் கான்டெக்ஸ்ட் புரிதல் ஆப்-டூ-ஆப் செயல்பாடுகள் போன்ற விஷயங்களில் Siri, போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளதாக விமர்சனம் செய்யப்படுகிறது. 2026-ல் ஆப்பிளின் ‘மாஸ்டர் பிளான்’ என்ன? தொழில்நுட்ப வட்டார தகவல்களின் படி, 2026-ல்: முழுமையாக ஏஐ-ஆதரவு பெற்ற Siri ஐபோன்களில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்ட Apple Intelligence அதிக சக்தி வாய்ந்த on-device AI processing தனியுரிமையை மையமாகக் கொண்ட ஏஐ அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம், AI போட்டியில் ஆப்பிள் தன் இழந்த முன்னிலையை மீட்டெடுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. முடிவாக AI உலகில் தாமதமாக நுழைந்தாலும், “சரியான நேரத்தில், சரியான முறையில்” ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவதே ஆப்பிளின் நீண்டகால யுக்தியாக இருக்கலாம். 2026-ல் அப்டேட் ஆகும் ஐபோன்கள், வெறும் ஹார்ட்வேர் அப்டேட் அல்ல முழுமையான AI அனுபவத்தை வழங்கும் சாதனங்களாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘நீதிமன்ற விசாரணை’ என்ற பெயரில் நடந்த மாபெரும் ஏமாற்று: முன்னாள் தலைமை நீதிபதி பெயரை பயன்படுத்தி மூதாட்டியிடம் ரூ.3.71 கோடி மோசடி

டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில், அதையே ஆயுதமாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’, ‘ஆன்லைன் விசாரணை’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, மூத்த குடிமக்களை மனதளவில் மிரட்டி, அவர்கள் வாழ்நாள் சேமிப்பை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. மும்பையில் நடந்த சமீபத்திய ஒரு சம்பவம், இந்த மோசடிகள் எந்த அளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்த முறை, சைபர் குற்றவாளிகள் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரையே பயன்படுத்தி, ஒரு மூதாட்டியிடமிருந்து சுமார் 3 கோடியே 71 லட்சம் ரூபாயை மோசடியாகப் பறித்துள்ளனர். காவல்துறை மற்றும் சிபிஐ விசாரணை என்ற பெயரில் நடந்த இந்த நாடகத்தில், அந்தப் பெண் பல வாரங்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, மனதளவில் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பில் தொடங்கிய பயம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த 26 ஆண்டுகளாக வசித்து வரும் அந்த மூதாட்டிக்கு, கடந்த ஆகஸ்ட் 18 அன்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. “உங்கள் அழைப்பை கொலாபா காவல் நிலையத்துடன் இணைக்கிறேன்” என்று கூறிய அந்த நபர், அழைப்பைத் துண்டித்துள்ளார். சில நிமிடங்களில், அந்தப் பெண்ணுக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை காவல் நிலைய அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, “உங்கள் ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார். இந்த தகவலைக் கேட்ட அந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். தனக்கு அப்படி எந்தக் கணக்கும் இல்லை என்றும், தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். கைது மிரட்டலும் போலி ஆவணங்களும் அவரின் விளக்கத்தை கேட்காமல், மோசடி நபர்கள் “இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உங்கள் பெயரும் அதில் இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்” என்று மிரட்டியுள்ளனர். மேலும், இது தொடர்பான போலி கடிதங்களையும், சட்ட ஆவணங்களைப் போல வடிவமைக்கப்பட்ட சில பதிவுகளையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். “நாங்கள் விசாரணை நடத்துகிறோம். எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்” என்று அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தை யாரிடமும் சொன்னால், அவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக, அந்த மூதாட்டி கடும் பயத்தில் ஆழ்ந்துள்ளார். தனது வங்கிக் கணக்குகள், முதலீடுகள், வீட்டுத் தகவல்கள் என அனைத்தையும் அவர்களிடம் தெரிவிக்கத் தொடங்கியுள்ளார். ‘ஆன்லைன் நீதிமன்றம்’ என்ற நாடகம் ஒரு கட்டத்தில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும், 24 மணிநேரமும் அவர்களது கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். விசாரணை நடத்தும் அதிகாரியின் பெயர் எஸ்.கே. ஜெயஸ்வால் என்றும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அந்தப் பெண்ணிடம் அவரது வாழ்க்கையைப் பற்றி 2 முதல் 3 பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதச் சொல்லியுள்ளனர். “இது உங்கள் நிரபராதத்தை நிரூபிக்க உதவும்” என்று கூறி, அவருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். பின்னர் நடந்தது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வீடியோ காலில் வந்த ஒருவர், தன்னை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்கள் வழக்கு தீவிரமானது. ஆனால் நீங்கள் நிரபராதி” என்று கூறி, அவரது முதலீட்டு ஆவணங்களை கேட்டுள்ளார். அந்தப் பெண், இது உண்மையான நீதிமன்ற விசாரணை என்றே நம்பியுள்ளார். கணக்குகளை காலி செய்யச் செய்த திட்டம் சிறிது நேரத்தில், “உங்கள் கணக்கில் சைபர் தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறி, விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை பணமாக்கச் சொன்னுள்ளனர். பின்னர், அந்த தொகையில் 90 முதல் 95 சதவீதத்தை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு தற்காலிகமாக மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். கைது பயத்தில் இருந்த அந்த மூதாட்டி, அவர்கள் சொன்னபடி பணத்தை அனுப்பியுள்ளார். இதற்குப் பிறகு, தொடர்ந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு மிரட்டல்கள் வந்துள்ளன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடந்த இந்த மோசடியில், மொத்தமாக 3 கோடியே 71 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைச் சொல்லி காலம் கடத்தினர். இதன் பின்னர்தான் தான் மோசடியில் சிக்கியிருப்பதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் – வெளிவந்த உண்மை அக்டோபர் 13 அன்று, அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாட்ஸ்ஆப் உரையாடல்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், ஸ்கிரீன் ஷாட்கள் ஆகியவற்றை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார். இந்த வழக்கில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்? காவல்துறையோ, சிபிஐயோ ஒருபோதும் வாட்ஸ்ஆப், வீடியோ கால் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக விசாரணை நடத்துவதில்லை. கைது செய்வதாக மிரட்டுவதும் இல்லை. அப்படிப்பட்ட அழைப்புகள் வந்தால், எந்தத் தகவலையும் பகிராமல் உடனே அந்த எண்ணைத் துண்டித்து, பிளாக் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள், நீதிமன்ற பின்னணி போன்றவை காண்பிக்கப்பட்டாலும், அதனால் நம்ப வேண்டாம். இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம். சைபர் மோசடியில் சிக்கினால், உடனடியாக அரசு நடத்தும் சைபர் குற்ற புகார் தளத்தில் அல்லது உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தாமதமின்றி புகார் அளித்தால், பணத்தை மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம்

எடை குறைப்பு என்ற பெயரில் நடந்த விபரீதம் – மதுரை மாணவியின் மரணம்; ஆயுஷ், மருந்து கட்டுப்பாட்டு துறை கடும் எச்சரிக்கை மதுரையில் இளம் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவும் தவறான உடல்நல ஆலோசனைகளின் ஆபத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. உடல் எடையை குறைக்க முயன்ற நிலையில், வெங்காரம் என்ற பொருளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   மதுரை செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த கலையரசி (19), அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே உடல் பருமன் இருந்ததால், எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அவர் தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.   அந்த வகையில், ஒரு வீடியோவில் கூறப்பட்ட ஆலோசனையை நம்பி, அருகிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் வாங்கிய வெங்காரத்தை கலையரசி உட்கொண்டுள்ளார். இதன் பின்னர், அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு வீடு திரும்பிய நிலையில், அதே இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்ற முடியவில்லை.   இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவத்திற்கு காரணமான நாட்டு மருந்துக் கடை மற்றும் சமூக வலைதள சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.   இந்த விவகாரம் குறித்து ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், எடை குறைப்பு டிப்ஸ் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி, பதிவு விவரம் இல்லாத விளம்பரங்களை நம்புவது ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆயுஷ் துறை அதிகாரிகள் கூறுகையில், “சமூக வலைதளங்களில் போலி முகவரி, தொடர்பு விவரம் இல்லாத விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நடவடிக்கை எடுப்பது சவாலாக உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை நம்பாமல், அரசு மருத்துவமனைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.   எடை குறைப்பு, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவும் விளம்பரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கலையரசியின் மரணம், இந்த ஆபத்துகளை உணர்த்தும் ஒரு துயரமான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

வடபழனி முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம்

ஜீவா நடிப்பில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியீடு சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் கதையும் திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீவா, இதற்கு முன்பு ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் காமெடி, காதல், ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த புதிய படத்தில், சமூகப் பின்னணியுடன் கூடிய முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் அரசியல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக கொண்டு கதை நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கம், இசை மற்றும் நடிகர்களின் நடிப்பு படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முதல் நாள் வசூல் மற்றும் ரசிகர் கருத்துகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோக்கியம்

View more
6 முதல் 60 வயது வரை தாக்கும் ஒற்றைத் தலைவலி: காரணங்கள், அறிகுறிகள், கவனிக்க வேண்டியவை

உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயது பேதமின்றி, 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களையும் இது பாதிக்கக்கூடிய ஒரு நரம்பியல் குறைபாடாகக் கருதப்படுகிறது.   ஒற்றைத் தலைவலி என்றால் என்ன? ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது சாதாரண தலைவலியல்ல. இது தலையின் ஒரு பக்கத்தில் துடிப்பான, கடுமையான வலியுடன் காணப்படும். சிலருக்கு இரு பக்கங்களிலும் ஏற்படலாம். இது இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது: எபிசோடிக் மைக்ரேன் – அவ்வப்போது வரும் தலைவலி குரோனிக் மைக்ரேன் – மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் நிலை பொதுவான அறிகுறிகள் அடிக்கடி கொட்டாவி வருதல் வாந்தி அல்லது வாந்தி உணர்வு ஒளி மற்றும் சத்தத்துக்கு அதிக உணர்வு தலையின் ஒரு பகுதியில் துடிப்பு வலி கண் சுற்று வலி அல்லது பார்வை மங்கல் சிலருக்கு தலைவலி ஆரம்பிக்கும் முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றலாம்.   காரணமாக இருக்கக்கூடியவை மன அழுத்தம் தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள் வானிலை மாற்றம் உணவு முறையில் மாற்றங்கள் நீண்ட நேரம் மொபைல்/கணினி பயன்படுத்துதல் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் தலைவலி தொடர்ந்து இருந்தால் அல்லது வலி தீவிரமாக இருந்தால், சுயமாக மாத்திரை எடுத்துக் கொண்டு தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர்கள் கூறுவதாவது, சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை மூலம் வலியின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால், தற்காலிக நிவாரணத்திற்காக அடிக்கடி வலி மாத்திரைகள் எடுத்தால் அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.   மேலாண்மை வழிகள் ஒழுங்கையான தூக்கம் மனஅழுத்தக் கட்டுப்பாடு (யோகா, தியானம்) சரியான உணவுமுறை மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பு மருந்துகள் தலைவலி டையரி வைத்துப் பதிவுசெய்தல் ஒற்றைத் தலைவலி முழுமையாக குணமாகும் நோயாக இல்லாவிட்டாலும், தகுந்த மருத்துவ மேலாண்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதன் தாக்கத்தை குறைக்க முடியும். தொடர்ந்து வலி இருந்தால் தாமதிக்காமல் நிபுணரை அணுகுவது பாதுகாப்பானது.

Admin பிப்ரவரி 27, 2026 0

எருமைப் பால் vs பசும்பால்: அறிவுத்திறன் குறித்த கருத்து சர்ச்சை

உடல் பருமன் மற்றும் தொற்றுநோய்கள்: புதிய ஆய்வு எச்சரிக்கை

வாழ்க்கைமுறை பிரச்சினையா… இல்லை அமைதியான நோயா? இந்தியாவை அச்சுறுத்தும் உடல் பருமன் அபாயம்

Government Stanley Medical College ஆய்வு: பழைய சோறு கஞ்சியில் இத்தனை நன்மைகளா?

வடித்த சாதம் வீணாகாமல் இருக்க நம் முன்னோர்கள் கடைப்பிடித்த அறிவு — இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி புளிக்க வைத்து, மறுநாள் காலை கஞ்சி போல அருந்துவது. எளிமையான இந்த உணவு, இன்று அறிவியல் ஆதாரத்தோடு பேசப்படுகிறது. அறிவியல் என்ன சொல்கிறது? சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், பழைய சோறு கஞ்சியின் மருத்துவ நன்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன. புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட அரிசிகளை மண் பானையில் 8–14 மணி நேரம் புளிக்க வைக்கும்போது, உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் உருவாகின்றன. இந்த நொதித்தல் செயல்முறையில்: Probiotics Postbiotics எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கின்றன. மருத்துவர் விளக்கம் டாக்டர் ஃபாரூக் அப்துல்லா கூறுவதாவது: “பழைய சோறு நொதிக்கும் போது Lactobacillus, Lactococcus lactis, Weisella, Pediococcus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இவை குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன.” குடல் ஆரோக்கியத்துக்கு உதவுமா? நீண்டகால குடல் அழற்சி (Inflammatory Bowel Disease – IBD) மற்றும் Crohn’s Disease போன்ற பிரச்னைகளில், மருத்துவர் ஆலோசனையுடன் குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொண்டால், நல்ல பாக்டீரியாக்களின் ஆதரவால் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவலாம் என தெரிவிக்கப்படுகிறது. இரும்புச்சத்து 20 மடங்கு அதிகரிக்குமா? சாதாரண அரிசியுடன் ஒப்பிடும்போது, புளிக்க வைக்கும் செயல்முறையால் இரும்புச்சத்து உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் தினசரி சுமார் 100 கிராம் அளவில் (மருத்துவர் ஆலோசனையுடன்) எடுத்துக் கொண்டால் இரத்தக்குறைபாட்டை கட்டுப்படுத்த உதவலாம். ஆனால் இது மருந்து மாத்திரைகளுக்கு மாற்றாக அல்ல; கூடுதலான சத்துணவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கவனிக்க வேண்டியவை “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.” பழைய சோற்றில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். HbA1c 8-க்கு குறைவாக இருப்பவர்கள் கட்டுப்பாட்டுடன் சாப்பிடலாம். 8-க்கு மேல் இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை கட்டுப்பாடு சிரமமாகலாம். முடிவில் பழைய சோறு கஞ்சி — ஒரு சாதாரண கிராமிய உணவு அல்ல; குடல் ஆரோக்கியம், இரும்புச்சத்து, உடல் சக்தி ஆகியவற்றுக்கு உதவும் பாரம்பரிய உணவு. “உணவே மருந்து” என்ற நம் முன்னோர் அறிவை, அறிவியல் இப்போது உறுதி செய்கிறது. ஆனால், தனிப்பட்ட உடல்நிலையைப் பொருத்து மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வதே பாதுகாப்பான வழி.

Admin பிப்ரவரி 17, 2026 0

முதுகில் திடீர் வீக்கம்… புற்றுநோய் அறிகுறியா?

சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு சமையலும் தெரிய வேண்டும்!

ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? ஆய்வில் வெளிவந்த குட் நியூஸ் இதுதான்!

Sawang Janpram – 102 வயதிலும் தடகளத்தில் தங்கம் வென்ற தாய்லாந்து வீரர்

“விளையாட்டே எனக்கு ஆரோக்கியம்” என்ற மனப்பாங்குடன் 102 வயதிலும் தடகளத்தில் அசத்தி வரும் தாய்லாந்து வீரர் சவாங் ஜான்பிரம் உலக கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்ற 26-வது தாய்லாந்து மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் அவர் பங்கேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 27.08 விநாடிகளில் நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றார். 100 வயதை கடந்த தடகள வீரர்களில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அனைத்து பிரிவுகளிலும் தங்கம் 100 முதல் 105 வயது வரையிலான வீரர்களுக்காக நடத்தப்பட்ட அனைத்து போட்டிகளிலும் அவர் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாஸ்டர்ஸ் தொடரில் இதுவரை நான்கு முறை கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்துள்ளார். ஓட்டப்பந்தயம் மட்டுமின்றி, வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போன்ற தடகள பிரிவுகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஒழுங்கான வாழ்க்கை முறையே ரகசியம் 70 வயதான தனது மகளுடன் வசித்து வரும் ஜான்பிரம், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். வீட்டைச் சுற்றியுள்ள மரங்களிலிருந்து உதிரும் இலைகளை சேகரித்து தோட்டப்புறத்தில் கொட்டுவது போன்ற சுறுசுறுப்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தனது மகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. “விளையாட்டு எனக்கு வலிமை தருகிறது” ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: “விளையாட்டில் ஈடுபடுவது என்னை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதோடு பயிற்சி செய்வது பசியை தூண்டுகிறது. அதனால் நன்றாக சாப்பிடவும் முடியும்.” 102 வயதிலும் தன்னம்பிக்கையுடன் தடகளத்தில் சாதனை படைக்கும் சவாங் ஜான்பிரம், வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதை நிரூபித்துள்ளார். இவரின் சாதனை உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஊக்கமாக உள்ளது.

Admin பிப்ரவரி 17, 2026 0

குறைந்த விலையில் மிகுந்த ஊட்டம்… பட்ஜெட்டுக்குள் அடங்கும் ஆரோக்கியம்!

Doctor Vikatan: குப்புறப் படுத்துத் தூங்கினால் முதுகுவலி வருமா?

மாத்திரை இல்லாமல் பீரியட்ஸ் வருமா?

0 Comments